ஐக்கிய நாடுகள் சபை (U.N.O)

இரண்டாம் உலகப் போர் பன்னாட்டு சங்கத்தின் தோல்வியை காட்டியது. ஐ.நா. சபை இரண்டாம் உலகப் போர் முடிவில் எற்பட்ட அழிவின் காரணமாக வருங்காலத்தில் போரை ஒழித்து பன்னாட்டு கூட்டுறவை வளர்க்கும் பொருட்டு உருவாக்கப்பட்டதாகும். 1945, ஏப்ரலில் உலகத்தலைவர்கள் சான்பிரான்சிஸ்கோ மாநாட்டை கூட்டினர். இதில் 51 நாடுகளில் பிரதிநிதிகள் கூடினர். இம்மாநாட்டில் ஐக்கிய நாடுகள் சபையின் அடிப்படை சாசனம் இறுதி செய்யப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபை 1945 அக்டோபர் 24 ஆம் தேதி 51 உறுப்பினர்களோடு உதயமானது. கடைசியாக ஜூலை 2011 ல் தெற்கு சூடான் ஐ.நா. வின் உறுப்பினராக சேர்ந்தது. ஐ.நா வில் தற்பொழுது 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. ஐ.நா.வில் பொது சபை, பாதுபாகாப்பு சபை, பொருளாதார மற்றுமம் சமூக அவை, தாமகாத்தா அவை, பன்னாட்டு நீதிமன்றம் மற்றும் ஐ.நா.வின் தலைமைச் செயலகம் ஆகியவை முக்கிய அங்கங்களாகும்.

பொது சபை (General Assembly)

ஐ.நா. சபையின் அனைத்து அமைப்புகளிலும் முக்கியமானது பொது சபை ஆகும். ஐ.நா. சபையின் அனைத்து உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளும் பொது சபையின் உறுப்பினர்களாவர். ஓவ்வொரு உறுப்பு நாடும் ஐந்து உறுப்பினர்கள் வரை இந்த அவைக்கு அனுப்பலாம். ஆனால் வாக்கு எண்ணிக்கையின் போது ஒவ்வொரு நாட்டிற்க்கும் ஒரு வாக்கு மட்டுமே உண்டு. ஆண்டுக்கு ஒரு முறை செப்டம்பர் மாதத்தில் ஐ.நா. பொது சபை கூட்டம் நடைபெறும். பாதுகாப்பு அவையின் வேண்டுகோளுக்கிணங்க அவசர கூட்டங்களும் நடத்தப்படும். முக்கியமாக அமைதி, பாதுகாப்பு, புதிய உறுப்பு நாடுகளை சேர்த்தல், வரவு செலவு திட்டங்களை நிறைவேற்றுதல் போன்றவை ஐ.நா. பொதுச் சபையின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பிர்களின் ஆதரவுடன் மட்டுமே நிறைவேற்றப்படுகிறது.

ஐ.நா. பொது சபையின் முக்கிய செயல்பாடுகள்

பாதுகாப்பு அவை

இந்த அவையின் நோக்கம் சர்வதேச நாடுகளுக்கிடையேயான அமைதியையும், பாதுகாப்பையும் பேணிக்காப்பது ஆகும். இதில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, சீனா உள்ளிட்ட ஐந்து நிரந்தர உறுப்பினர்களையும், பத்து நிரந்தரமற்ற உறுப்பினர்களையும் கொண்டது. நிரந்தரமற்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும். நிரந்தரமற்ற உறுப்பினர்கள் ஐ.நா. பொதுச் சபையால் தேர்தெடுக்கப்டுவார்கள். நிரந்தர உறுப்புநாடுகளுக்கு ‘தடுப்புரிமை ஆணை (Veto Power)’ உண்டு. முக்கிய விவகாரங்களுக்கு ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளின் ஆதரவை பெற்றாக வேண்டும். ஒரு நிரந்தர உறுப்பு நாடு எதிர்த்து வாக்களித்தாலும் தீர்மானங்களை நிறைவேற்ற முடியாது. பாதுகாப்பு சபையின் உறுப்பினர்கள் மாதம்ஒரு முறை கூடி புதிய தலைவரை தேர்நதெடுப்பர். மூன்றில் இரண்டு பங்கு உறுப்பிர்களின் ஆதரவின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படும்.
இந்தியா
பொருளாதாரம்
பொது அறிவியல்
புவியியல்