எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல் - சிறப்பு வினா விடைகள்

1. 'அலகி லாவிளை யாட்டுடையார் அவர்' - அலகிலா - இன் எதிர்ச்சொல் என்ன?
A. அளவற்ற
B. அளவுடைய
C. நிலைபெறாத
D. இடைவிடாத
Answer
B. அளவுடைய
2. பகல்வெல்லும் கூகையைக் காக்கை, இகல் வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது - எதிர்ச்சொல் கண்டறிக
A. பகல் X காலை
B. இகல் X பகை
C. இகல் X நட்பு
D. இகல் X ஒழுக்கம்
Answer
C. இகல் X நட்பு
3. 'நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் பின்நீர பேதையார் நட்பு' - 'நீரவர்' - எதிர்ச்சொல் தருக.
A. அறிவுடையார்
B. அறிவிலார்
C. பண்புடையார்
D. பண்பிலார்
Answer
B. அறிவிலார்
4. 'உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும் பெற்றியார்ப் பேணிக் கொளல்' - இக்குறளில் உள்ள சொற்களில் எதிர்ச்சொல் காண்க.
A. நோய் X துன்பம்
B. உறாஅமை X துன்பம் வராமல்
C. பெற்றியார் X பொறாமையுடையார்
D. பெற்றியார் X சிறுமையுடையார்
Answer
D. பெற்றியார் X சிறுமையுடையார்
5. 'சோரமுதற் புன்மையெதுந் தோன்றா நாடு' 'புன்மை' - எதிர்சொல் தருக
A. புன்மை வன்மை
B. புன்மை மென்மை
C. புன்மை நெறியுடைய செயல்கள்
D. புன்மை நெறி பிறழ்ந்த செயல்கள்
Answer
C. புன்மை நெறியுடைய செயல்கள்
6. 'வெற்றிவேல் தடக்கைக் கொற்றவை அல்லன்' - இதில் 'தட' என்பதன் எதிர்ச்சொல் கண்டறிக
A. பெரிய
B. நீண்ட
C. சிறிய
D. குறுகிய
Answer
D. குறுகிய
7. 'ஒழுக்கத்தின் ஓல்கார் உரவோர் இழுக்கத்தின் ஏதம் படுபாக்கறிந்து' - எதிர்சொல் கண்டறிக
A. ஒழுக்கம் X விழுப்பம்
B. ஓல்கார் X விலகமாட்டார்
C. ஏதம் X குற்றம்
D. ஏதம் X குற்றமற்ற
Answer
C. ஏதம் X குற்றம்
8. 'உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார் கடையரே கல்லாதவர்' - எதிர்சொல் காண்க
A. ஏக்கற்றும் X கவலை
B. ஏக்கற்றும் X கவலையின்றி
C. உடையார் X செல்வர்
D. கடையர் X தாழ்ந்தவர்
Answer
B. ஏக்கற்றும் X கவலையின்றி
9. 'மல்லல் குருத்தை ஈரும் பொழுதில் வாள ராவென்று' 'மல்லல்' - எதிர்சொல் காண்க
A. வளம்
B. வறிய
C. காய்ந்த
D. சுருங்கிய
Answer
C. காய்ந்த
10. 'கோதைவில் குரிசில் அன்னான் கூறிய கொள்கை கேட்டான்' - 'குரிசில்' எதிர்ச்சொல் தருக
A. குரிசில் X தலைவன்
B. குரிசில் X முனிவன்
C. குரிசில் X தொண்டன்
D. குரிசில் X சீடன்
Answer
C. குரிசில் X தொண்டன்
11. 'நண்பாற்றா ராகி நயமில செய்வார்க்கும் பண்பாற்றாராதல் கடை' - எதிர்சொல் காண்க.
A. நண்பு X நட்பு
B. நயமில X தீங்கு
C. கடை X முதன்மை
D. கடை X சிறப்பு
Answer
D. கடை X சிறப்பு
12. தெருளும் உணர் வில்லாத சிறுமையேன் யான் என்றார்' 'தெருளும்' - எதிர்சொல் காண்க
A. தெருளும் X தெளிவில்லாத
B. தெருளும் X தெளிவுடைய
C. தெருளும் X மருளும்
D. தெருளும் X அருளும்
Answer
B. தெருளும் X தெளிவுடைய
13. 'மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம் தகுதியான் வென்று விடல்' - மேற்கண்ட குறளில் காணப்படும் சொற்களுக்கு சரியான எதிர்சொல் காண்க.
A. மிகுதியான் செருக்கு
B. மிக்கவை நன்மை
C. தகுதியான் பொறுமை
D. தகுதியான் சான்றாண்மை
Answer
B. மிக்கவை நன்மை
14. 'புகலு தற்கரி தடவியுண் டவ்வழிப் பொருத்தி' 'அடவி' - எதிர்சொல் காண்க.
A. அடவி X காடு
B. அடவி X நாடு
C. அடவி X மண்
D. அடவி X விண்
Answer
B. அடவி X நாடு
15. 'உறுபொருளும் உல்கு பொருளுந்தன் ஒன்னார்த் தெறுபொருளும் வேந்தன் பொருள்' - எதிர்சொல் காண்க.
A. தெறு பொருள் X பகையால் வரும் பொருள்
B. தெறு பொருள் X நட்பால் வரும் பொருள்
C. தெறு பொருள் X அரசுரிமையால் வரும் பொருள்
D. தெறு பொருள் X வரியாக வரும் பொருள்
Answer
B. தெறு X பொருள் நட்பால் வரும் பொருள்
16. 'காய்ந்த நாவலன் இம்மெனத் திருவுருக் கரந்தான்' - எதிர்ச்சொல் காண்க.
A. கரந்தான் X மறைந்தான்
B. கரந்தான் X தோன்றினான்
C. கரந்தான் X வழங்கினான்
D. கரந்தான் X பெற்றான்
Answer
B. கரந்தான் X தோன்றினான்
17. 'ஒழுக்கம் விழுப்பம் தரலான்; ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்" எதிர்ச்சொல் காண்க.
A. விழுப்பம் X காத்தல்
B. விழுப்பம் X இழிவு
C. ஓம்பப்படும் X காத்தல்
D. ஓம்பப்படும் X அளிக்கப்படும்
Answer
B. விழுப்பம் X இழிவு
18. 'கள்வனைக் கோறல் கடுங்கோ லன்று' - எதிர்ச்சொல் காண்க
A. கோறல் X காப்பாற்றுதல்
B. கோறல் X வழங்குதல்
C. கோறல் X கொல்லுதல்
D. கோறல் X சினம் கொள்ளல்
Answer
A. கோறல் X காப்பாற்றுதல்
19. 'பேதைமை செய்கை உணர்வே அருவுரு வாயில் ஊறே நுகர்வே வேட்கை' - எதிர்சொல் தருக.
A. அரு X உருவம்
B. அரு X உருவமற்றது
C. உரு X வடிவம்
D. பேதமை X அறியாமை
Answer
A. அரு X உருவம்
20. 'இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கொடுப்பார் இலானுங் கெடும்' - எதிர்ச்சொல் தருக.
A. கெடுப்பார் X கொடுப்பார்
B. ஏமரா X பாதுகாப்பில்லாத
C. ஏமரா X பாதுகாப்புடைய
D. இலானும் X இல்லையென்றாலும்
Answer
C. ஏமரா X பாதுகாப்புடைய
இந்தியா
பொருளாதாரம்
பொது அறிவியல்
புவியியல்